சிந்தனை
சிந்தனை செய் மனமே, தினமே
சிந்தனை செய் மனமே!
சிந்தனை செய் மனமே, செய்தால்
தீவினை அகன்றிடுமே!
சிவகாமி மகனை, சண்முகனை
சிந்தனை செய் மனமே!
செந்தமிழ் தரும் ஞான தேசிகனை,
செந்தில் கந்தனை, வானவர் காவலனை, குகனை
சிந்தனை செய் மனமே!
சந்ததம் மூவாசை சகதியில் உழன்றனை!
சமரச சன்மார்க்க நெறிதனை மறந்தனை!
அந்தகன் வரும்போது அவனியில் யார் துணை?
ஆதலினால் இன்றே...
அருமறை பரவிய
சரவண பவ குகனை
சிந்தனை செய் மனமே!


5:29 PM
Sivaguru Sivasithan
, Posted in

0 Response to "சிந்தனை"
Post a Comment